அகத்திக் கீரை - உன்னத கீரை !
அகத்திக் கீரை ஆண்டு முழுவதும் பயிராகும் தாவரம்.
தை, மாசி மாதங்களில் பூக்கும்.
வைட்டமின் ஏ, கால்சியம், உப்பு, புரோட்டின், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து உள்ளன. சுண்ணாம்பு சத்து இருப்பதால் எலும்பு, பல், கண் முதலியவற்றிற்கு அகத்திக்கீரை நல்லது.
வயோதிகக் காலத்தில் எலும்பு வலிமையாக இருக்க அகத்தி இலை பெரிதும் உதவும்.
ஓரளவு வாயுத் தன்மை உள்ள போதிலும், பித்தத்தை தணிக்கும்.
நீர் சளியைப் போக்கும். ரத்தக் கொதிப்பு நோய்க்கு நல்ல மருந்து.
மலச்சிக்கலை நீக்கும்.
அகத்திப் பூவும், இளம் இலையும் கலந்து சாறு பிழிந்து பருகி வர குடல் புண் ஆறும்.
3 கருத்துக்கள்:
/அகத்திப் பூவும், இளம் இலையும் கலந்து சாறு பிழிந்து பருகி வர குடல் புண் ஆறும்./
எனக்குத் தேவையான தகவல். நன்றிங்க.
அகத்தி கீரைய கண்ணால கண்டே எத்தனை வருஷமாச்சு...
நன்றி பாரதியார்.
நன்றி
சுசி,வானம்பாடிகள்,
Post a Comment