உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு
Showing posts with label காலசுவடு. Show all posts
Showing posts with label காலசுவடு. Show all posts

30 October 2009

6ல் சாவு , 100ல் சாவு !


குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார்.

அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர்.

அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும்.

ஆகவே, ஆறிலும் சாவுதா‌ன், அ‌ப்படி இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன். எப்படி செத்தால் என்ன? அத‌ற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான்.

கர்ணன் கூறியதுதான் பழமொழிக்கு(ஆறிலும் சாவு, நூறிலும் சாவு ) உண்மையான பொரு‌ள்.

கர்ணன் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது சிவாஜி கணேஷன் நடித்த கர்ணன் படம் தான்.கர்ணனின் வாழ்கையை அப்படியே நம் கண் முன் நிறுத்தி ஒரு பிரமிப்பை படைத்தது வாழ்ந்து இருப்பார்.அந்த இறுதி காட்சி நம் கண்களை விட்டு அகல மறுக்கும் படம் முடித்த பிறகும்.

பதிவுகள் தொடரும் ...


Read more...

04 September 2009

சிவ - விஷ்ணு இணைப்பு!




தசரதர் இறந்த போது, காட்டில் ராமர் இருந்ததால் தந்தைக்கு இறுதி கடன் செய்ய முடியவில்லை. ஆனால், ஜடாயு என்ற கழுகுக்கு அவர் இறுதி கடனைச் செய்தார். சீதையை, ராவணன் கடத்திச் சென்ற போது ஜடாயு தடுத்தது. அதை தன் வாளால் வெட்டிக் கொன்றான் ராவணன். ஆனால், அது இறக்கும் முன் சீதை கடத்தப்பட்டதை ராமனிடம் சொல்லிவிட்டே உயிர் விட்டது. அந்த நன்றிக் கடனுக்காகத்தான் ஜடாயுவிற்கு இறுதிக் கடன் செய்தார் ராமர்.
--------------------------------------------------------------------------------



சிவபெருமானுடைய பஞ்சாட்சரமாகிய, "நமசிவாய' என்ற மந்திரத்தில் உயிர் போன்ற முக்கிய எழுத்து, "ம!'

அதுபோல் விஷ்ணுவின் அஷ்டாட்சர மந்திரத்தின் உயிர் போன்ற முக்கிய எழுத்து, "ரா!' இந்த, ம, ரா ஆகிய இரண்டு எழுத்துக்களும் சேர்ந்தது தான், "ராம' என்ற மந்திரம். சிவன், விஷ்ணு இரண்டும் சேர்ந்த அற்புத சக்தி வாய்ந்த நாமம், ராம நாமம்.

--------------------------------------------------------------------------------------



காசிக்குச் சென்று ஒரு சிவயோகியிடம் தீட்சை பெற்றார் முத்துசுவாமி தீட்சிதர். அப்போது, கங்கையிலிருந்து மேலே


ஒரு வீணை தோன்றியது. அதை கையில் எடுத்து வணங்கி, கங்கா தேவியின் ஆசீர்வாதமாகப் பெற்றுக் கொண்டார்


முத்துசாமி தீட்சிதர். அந்த வீணையில் ராமநாமம் பொறிக்கப்பட்டிருந்தது.

ராம் ராம் !


Read more...

04 July 2009

நையாண்டியும், எகத்தாளமும்



ஆஸ்கார் ஒயிஸ்ட் - எழுத்தாளர்

இவர் நீதி, நேர்மை, சத்தியம், புண்ணியம். ஒழுக்கம். நம்பிக்கை. நட்பு, காதல் என்று பிறர் புனிதப்படுத்தும் அத்தனை விஷயங்களையும் பக்கம் பக்கமாகக் கிண்டலடிப்பவர்.

சிறிதளவு நேர்மை இருப்பது ஆபத்தானது. அதிகபட்ச நேர்மையுடன் இருப்பது உயிருக்கே உலை வைத்துவிடும்.நல்ல அறிவுரையை யாராவது உங்களுக்கு வழங்கினால், அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று முழிக்க வேண்டாம். உடனே மற்றவர்களுக்கு கொடுத்துவிடுங்கள். நல்ல அறிவுரையை நாம் வைத்துக் கொள்ளக்கூடாது.
இது அவரின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில வரிகள்.

ஆனால் தன்னையும் சேர்த்தே தான் கிண்டலடித்துக் கொள்வார். "நான் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால் உடனே எனக்குப் பயம் பிறந்துவிடும். ஒருவேளை நான் சொன்னது தவறானதாக இருக்குமோ? அதனால்தான் என் கருத்துகளுக்கு இத்தனை வரவேற்பு கொடுக்கிறார்களோ?'

நையாண்டியும் எகத்தாளமும் நிரம்பி வழிந்தாலும், ஒயில்டின் எழுத்துகள் நிச்சயம் எதிர்மறையானவை அல்ல. ஓர் உதாரணம். இழந்துபோன என் இளமையை மீட்க எதையம் செய்யத் தயாராக இருக்கிறேன். மூன்று விஷயங்களைத் தவிர காலை சீக்கிரம் படுக்கையில் இருந்து எழுந்திருப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, மதிக்கத்தக்க மணிதராக வாழ்வது.'

என்ன ஒரு வித்யாசமான புகழ் பெற்ற எழுத்தாளர்!
பதிவுகள் தொடரும் ...


Read more...

03 July 2009

பார்வை இழந்தால்-வாழ்கை ?

பார்வை இழந்தால் ,வாழ்கை என்னவாகும் ?

என்னென்ன சாதனைகள் செய்ய முடியும்?

உதாரணம் - லூயிஸ் ப்ரெய்ல்



இராணுவத்தில் தகவல் பரிமாற உதவும் சங்கேதக் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு ப்ரெய்ல் எழுத்து முறையை தன்னுடைய 15வுது வயதில் வடிவமைத்தார்.

இது ப்ரெய்ல் எழுத்து முறை -கணிதம் மற்றும் சங்கீதக் குறியீடுகளையும் உள்ளடக்கியது.



தன்னுடைய 20வது வயதில் பார்வையற்றோருக்கான முதல் புத்தகத்தை வெளியிட்டார்.



அவர் வாழ்நாளின் இறுதிவரை ப்ரெய்ல் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் அவர் இறந்தபின் தான் அதன் சிறப்புகளை அறிந்த பிரான்ஸ் அரசு ப்ரெய்ல் கல்வி முறையை அங்கீகரித்தது.

இந்த விஞ்ஞான யுகத்துக்குப் பொருந்தும் வகையில் முன்னெப்போதும் விட ப்ரெய்ல் முறை மேம்படுத்தப்பட்டுள்ளது.எனவே பார்வையற்றோர்க்கான உயர் கல்விக்கும், அவர்களது சாதனைகளுக்கும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தி, நாம சந்தோஷப்படுவது சின்ன சந்தோஷம். ஆனா மற்றவங்களோட சந்தோஷத்தையும் நம்ம சந்தோஷமா பெரிசா கொண்டாடும் போது கிடைப்பது பெரிய சந்தோஷம். சின்ன சந்தோஷத்தை வார்த்தைகள்ல சொல்லிவிடலாம். பெரிய சந்தோஷத்தை வார்த்தைகள்ல அடக்க முடியாது


Read more...

01 July 2009

அப்படியா !



முதன் முதலாக சாலையின் குறுக்கே கடப்பதற்கான நடைபாதையை லண்டன் பார்லிமென்ட் ஹவுஸ்க்கு முன்பு உள்ள சாலையில் 1926ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்டது. இது இரண்டு இணைக் கோடுகள் சாலையில் வரையப்பட்டிருக்கும். அருகில் ஒரு பலகையில் ஒரு "அம்புக்குறி' அடையாளம் போட்டு அதில் "ப்ளீஸ் கிராஸ் ஹியர்' என்று எழுதியிருக்கும்!.
----------------------------------------------------------------------------------------
சென்னை மாகாண முதலமைச்சராக ஒமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்த போது தன் வரவேற்பு அறையில் பார்வையாளர்களுக்காக சோபா செட், மேஜை, நாற்காலிகள் போன்றவற்றை, "ஸ்பென்சர் அண்ட் கம்பெனி'யிலிருந்து வாடகைக்கு எடுத்திருந்தார்.
மாதம் ஒன்றுக்கு வாடகை 60 ரூபாய் என்ற வகையில், ஒவ்வொரு மாதமும் தன் சம்பளத் தொகையிலிருந்து கொடுத்தனுப்புவார். அது போலவே தன் காருக்கான பெட்ரோல் செலவு, ரிப்பேர் செலவு, டிரைவர் சம்பளம் ஆகியவற்றையும் தானே ஏற்றுக் கொண்டார்
-------------------------------------------------------------------------------------
இன்றைய பலன்
மேஷம்:தாமதம்
ரிஷபம்:தெளிவு
மிதுனம்:ஈகை
கடகம்:உயர்வு
சிம்மம்:கீர்த்தி
கன்னி:சிந்தனை
துலாம்:வெற்றி
விருச்சிகம்:விருத்தி
தனுசு:ஓய்வு
மகரம்:போட்டி
கும்பம்:அலைச்சல்
மீனம்:லாபம்

மாயையை
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு


பதிவுகள் தொடரும் ...


Read more...

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP